/* */

குளத்தில் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழப்பு

தெப்பக்குளத்தில் மீனுக்கு இறை போடும் போது குளத்தில் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை விராலூரைச் சேர்ந்தவர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி லாவண்யா. இவர் மற்றும் இவரது தோழி யசோதா ஆகிய இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை விராலிமலை-மதுரை சாலையில் உள்ள நீர் நிரம்பிய தெப்பக்குளத்தின் படியில் அமர்ந்து குளத்து மீன்களுக்கு இறையாக பொரி கடலையை குளத்து நீரின் நடுவே தூக்கி எறிந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய லாவண்யா கால் தவறி குளத்து நீரில் விழுந்து தத்தளித்துள்ளார்.

இதனையடுத்து அவரை காப்பாற்ற நீரில் குதித்த யசோதாவும் நீரில் மாட்டி தத்தளிக்க அருகிலிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லாவண்யா இன்று உயிரிழந்தார். 18 வயதான மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுகாயங்களுடன் யசோதா நலமுடன் உள்ளார். இறந்த லாவண்யா கடந்த 12-ஆம் வகுப்பு தேர்வில் 510 மதிப்பெண் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 July 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  3. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  5. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  6. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  8. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  9. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  10. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...