/* */

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம்: மாநிலங்களவை திமுக எம்பி திறந்து வைப்பு

விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசலில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்

HIGHLIGHTS

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம்:  மாநிலங்களவை திமுக எம்பி திறந்து வைப்பு
X

திமுக எம்பி. அப்துல்லா

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாநிலங்களவை எம்பி அப்துல்லா துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் விளைந்த நெல் மணிகளை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் பல்வேறு இடங்களில் கொட்டி வைத்துள்ளார். நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து வரும் சூழ்நிலையில் தமிழக அரசுக்கு விவசாயிகள் ஒரு கோரிக்கை வைத்தனர்.அதில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து விவசாயிகள் கொட்டி வைத்துள்ள நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

இதனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசலில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாநிலங்களவை எம்பி அப்துல்லா திறந்து வைத்தார். நிகழ்வில், அன்னவாசல் ஒன்றிய செயலாளர் சந்திரன், திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 8 Oct 2021 10:37 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...