/* */

விராலிமலை அருகில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

விராலிமலை அருகில் ரோட்டாத்துப்பட்டி கோரையாற்றில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளியவர் கைது. டிராக்டர் பறிமுதல்

HIGHLIGHTS

விராலிமலை அருகில்  அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
X

விராலிமலை பகுதியில்  மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் மணல் அள்ளுவதாக விராலிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இத்தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ரோட்டாத்துப்பட்டி கோரையாற்றில் இருந்து இரவு நேரங்களில் மணல் கடத்தியது தெரிய வந்தது. இந்நிலையில் ரோட்டாத்துப்பட்டி கோரையாற்றில் முல்லையூர் துலுக்கம்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் விக்னேஸ்வரன் என்பவர் அவருக்கு சொந்தமான டிராக்டரில் மணல் அள்ளுவதை கண்ட போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் இதுபோன்று இரவு நேரங்களில் மணல் கடத்தல் நடைபெறுவது தொடர் வாடிக்கையாக இருந்து வருகிறது.

Updated On: 5 July 2021 4:14 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  2. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  5. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  10. சென்னை
    பூங்காக்களில் வளர்ப்பு நாய்கள் அழைத்து வர புதிய கட்டுப்பாடு!