/* */

மூன்று மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சித்தன்னவாசல் சுற்றுலாத்தலம்

ஆர்வத்துடன் கண்டு களித்த பொதுமக்கள்

HIGHLIGHTS

மூன்று மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சித்தன்னவாசல் சுற்றுலாத்தலம்
X

சித்தன்னவாசல் சுற்றுலாதளம் இன்று திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ஆர்வத்துடன் சுற்றி பார்க்க வந்த பொதுமக்கள்

கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி தமிழகம் முழுவதும் சுற்றுலா தளங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக அரசு பல்வேறு தரவுகளை தளர்த்தி இன்று முதல் சுற்றுலாத் தளங்கள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான சித்தனவாசல் சுற்றுலாதளம் இன்று திறக்கப்பட்டது.

மூன்று மாதங்களுக்குப் பிறகு புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்தன்னவாசல் சுற்றுலா தளம் திறக்கப்பட்ட முதல்நாளிலேயே ஆர்வமாக மக்கள் வந்தனர். தென்னிந்தியாவின் அஜந்தாகுகை என்று அழைக்கப்படும் அஜந்தா குகையை பார்ப்பதற்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு சிறுவர் பூங்கா, தமிழன்னை சிலை, மகாவீரர் சிலை, படகுகுளம், உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அதிநவீன முறையில் இசை நீரூற்று

அமைக்கப்பட்டுள்ளது. இன்று திறக்கப்பட்ட முதல் நாளிலேயே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர். சுற்றுலா பயணிகள் முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அரசு அறிவித்துள்ள தளர்வுகளில் பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் மட்டுமே அனுமதி அளித்துள்ளது. தண்ணீர் தொடர்பான விளையாட்டுக்கு அனுமதி அளிக்கவில்லை இதனால் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் படகு குளங்களுக்கு அனுமதியில்லை சுற்றுலா பயணிகள் சமணர் குடவரை கோவில், ஏழடிபட்டம் மலைமீது சுற்றி பார்ப்பதற்கு இணையவழியாக நுழைவு சீட்டு வழங்கப்பட்டது .

Updated On: 5 July 2021 4:07 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  2. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  5. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  7. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  8. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!
  9. ஆரணி
    முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!
  10. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுனர் பலி...!