/* */

புதுக்கோட்டை அருகே தூக்கிட்டு பெண் தற்கொலை

புதுக்கோட்டை அருகே தூக்கிட்டு பெண் தற்கொலை
X

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே தீராத நோய் காரணமாக விரக்தியடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

அன்னவாசல் அருகே உள்ள மதியநல்லூர் கல்லம்பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி மனைவி சின்னப்பொன்னு (46) .இவர் அன்னவாசலில் உள்ள ஒரு தனியார் இரும்பு தொழிலகத்தில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சின்னப்பொன்னுக்கு தீராத ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தாராம்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சின்னப்பொன்னு இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லையாம். இந்த நிலையில் நேற்று காலை எல்லையாப்பட்டி பிலியடிக்காடு வேப்பமரத்தில் சின்னப்பொன்னு தூக்கில் சடலமாகத் தொங்குவதாக அப்பகுதியினர் அன்னவாசல் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Updated On: 3 July 2021 3:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்