/* */

அரிமளம் அருகே ஜல்லி ஏற்றி சென்ற லாரி மோதி 13 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

இரவு நேரம் என்பதால் ஆடுகள் சாலை ஓரம் படுத்திருந்தது. அப்போது அந்த வழியாக ஜல்லி ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக சாலையோரம் படுத்திருந்த ஆடுகள் மீது மோதியது

HIGHLIGHTS

அரிமளம் அருகே ஜல்லி ஏற்றி சென்ற லாரி மோதி 13  செம்மறி ஆடுகள் உயிரிழப்பு
X

பைல் படம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகில் ஏ.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மதி. இவர், புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியில் கொட்டகை அமைத்து செம்மறி ஆடுகளை மேய்த்து வருகிறார்.

இந்நிலையில், ஆடுகளை மேய்த்துவிட்டு நேற்று இரவில் அரிமளத்தில் இருந்து திருமயம் செல்லும் சாலை ஓரம் ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். ஆடுகள் சாலை ஓரம் படுத்திருந்தது. அப்போதுஇன்று அதிகாலையில் அந்த வழியாக ஜல்லி ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக சாலையோரம் படுத்திருந்த ஆடுகள் மீது மோதியது. இதில்,13 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானது. மேலும், இரண்டு ஆடுகள் பலத்த காயம் அடைந்தது.

விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் ஆளப்பிறந்தான் கிராமத்தை சேர்ந்த உடையப்பன், அரிமளம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து, ஆட்டின் உரிமையாளர் மதி அளித்த புகாரின் பேரில், அரிமளம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 July 2021 7:25 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  2. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  3. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  7. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  8. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  9. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  10. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!