/* */

திருமயம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டி

திருமயம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருமயம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டி
X

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துலையானூர் மங்களா நாச்சி அம்மன் மற்றும் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஐந்து ஊரார்கள் சார்பில் மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது .

இதில் ஆத்தங்குடி ,கோனபட்டு, திருப்பத்தூர் ,காரைக்குடி, திருமயம், பள்ளத்தூர், உள்பட பல்வேறு பகுதியில் இருந்து150க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

இதில் முதன்முதலாக கோவில் காளைகளை களத்தில் இறக்கினார்கள் பின்னர் மற்ற காளைகளை ஒவ்வொன்றாக களத்தில் இறக்கி விட்டனர்.களத்தில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் விரட்டி மடக்கிப் பிடித்தனர்.

சில காளைகள் யாருக்கும் பிடிபடாமல் ஓடியது. நிகழ்ச்சியில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்காக மருத்துவ குழுவினர் அமைக்கப்பட்டிருந்தன.மேலும் கால்நடைகளுக்கு பரிசோதனை செய்திட கால்நடை மருத்துவ குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தனர் .

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை காண துலையானூரை சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தந்து பார்வையிட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Updated On: 26 April 2022 9:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு