/* */

பொன்னமராவதி அருகே பி.உசிலம்பட்டி கிராமத்தில் மீன் பிடி திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பி.உசிலம்பட்டி கிராமத்தில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பி.உசிலம்பட்டி கிராமத்தில் ஆண்டு தோறும் அறுவடை முடிந்த பின்பு தாழ்பாய் கண்மாயில் உள்ள மீன்களை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிடிப்பது, மீன் பிடி திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்

அந்த வகையில் கடந்த 7ஆண்டுகளாக சரியாக மழை பெய்யாத நிலையில் கடந்த ஆண்டு பெய்த மழையில் கண்மாய் ஓரளவுக்கு பெருகி விவசாயிகள் விவசாயம் செய்துவந்தனர்.

கடந்த மாதம் அறுவடை முடிந்த நிலையில் பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழாவானது நடந்தது பொன்னமராவதி அருகே பி.உசிலம்பட்டி தாழ்பாய் கண்மாயில் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் மீன்பிடி உபகரணங்கள் வலை, ஊத்தா, கச்சா, சேலை உள்ளிட்டவை வைத்து சிலேப்பி, கட்லா, விரால், குரவை, கெழுத்தி வகை மீன்களை பிடித்தனர்.

இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதியான பொன்னமராவதி, தொட்டியம்பட்டி, கட்டையாண்டிபட்டி, மயிலாப்பூர், பரியாமருதுபட்டி, நெற்குப்பை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு மீன்களைப் பிடித்தனர்.

Updated On: 23 April 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  2. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  3. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  5. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  6. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  7. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  9. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  10. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...