/* */

45 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்

பொன்னமராவதி ஒன்றியம் மறவாமதுரையில் 45 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு.

HIGHLIGHTS

45 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்
X

மீட்கப்பட்ட பசுவுடன் தீயணைப்பு வீரர்கள். 

மறவாமதுரையை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் வெள்ளைக்கன்னு என்பவருக்கு சொந்தமான பசு 45அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் தவறி விழுந்த பசுவை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் தவறி விழுந்த பசுவை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். விரைந்து வந்து பசுவை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு மாட்டின் உரிமையாளர் வெள்ளைக்கன்னு மற்றும் அக்கிராம மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

Updated On: 3 Dec 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு