/* */

திருமயம்: சுகாதார நிலைய பழைய கட்டிடத்தில் திடீர் தீ விபத்து

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள நச்சாந்துபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம், பழைய கட்டிடம் உள்ளது. அதில், மருத்துவமனைக்கு தேவையான மிஷினரி சாமான்கள், பீஜிங் பார்டர், கொசு மருந்து நாப்கின்கள் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அந்த கட்டிடத்தில் இருந்து புகை வருவதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அப்பகுதியில் இருந்த அலுவலர்கள், அருகில் சென்று பார்த்தபோது, கரும்புகையுடன் தீ மளமளவென பரவி எரிய தொடங்கியது. இதுகுறித்து அதிகாரிகள், திருமயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப்படையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். உள்ளே இருந்த அனைத்து சாமான்களும் எரிந்து சாம்பலாகி இருந்தன. அதன் மதிப்பு ரூபாய் 2 லட்சம் வரை இருக்கலாம் என தெரிய வருகிறது. இதுகுறித்து, அலுவலர்கள் மேலதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். தீ விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Jun 2021 1:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  2. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  5. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  6. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  8. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  9. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  10. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...