/* */

கொரோனா 3 ஆவது அலையைப் பற்றி கவலை வேண்டாம்: அமைச்சர் ரகுபதி

கொரோனா 3 ஆவது அலை வந்தால் அதிலிருந்து பொது மக்களை காக்க கேடயம் கவசமாக இருப்பது தடுப்பூசி மட்டும்தான்

HIGHLIGHTS

கொரோனா 3 வது அலை வருகிறதா இல்லையா என்பதை நினைத்துக் கவலைப்படக் கூடாது, மூன்றாவது அலை வந்தால் அதிலிருந்து பொது மக்களை காக்கும் கேடயம் கவசம் தடுப்பூசி மட்டும்தான் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சியில் உள்ள பாத்திமா அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி போடும் முகாமை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

தடுப்பூசி போடும் முகாமில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது: கொரோனா 3 ஆவது அலை வருகிறதா இல்லையா என்பதை நினைத்துக் கவலைப்படக் கூடாது, ஆனால் மூன்றாவது அலை வந்தால் அதிலிருந்து பொது மக்களை காக்கும் கேடயம் கவசமாக தடுப்பூசி மட்டும்தான் பயன்படுகிறது. யாரெல்லாம் தடுப்பூசி எடுத்துக் கொள்கிறார்களோ அவர்‌கள் 3 ஆவது அலை வந்தால் அந்த பாதிப்பிலிருந்து தப்பித்து கொள்ளமுடியும்.

பொதுமக்கள் அதிகளவில்‌ விழிப்புணர்வு அடைந்துள்ளனர். தற்போது தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டு வருகின்றனர்.மற்ற மாநிலங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து தடுப்பூசி போட வைக்கும் நிலை உள்ளது.

ஆனால் தமிழகத்தில் பொதுமக்கள் தாங்களாகவே ஆர்வத்துடன் திரண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இது 3ஆவது அலையிலிருந்து தங்களை காத்துக் கொள்ள தயாராகி விட்டார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்றார் அமைச்சர் ரகுபதி.

பின்னர் அதே ஊராட்சிக்குட்பட்ட மணவாளங்கரையில் ஊராட்சி சார்பில் கட்டப்பட்ட இரண்டு நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஒரு குளியல் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கோட்டாட்சியர் அபிநயா, சுகாதார இணை இயக்குனர் கலைவாணி, திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 5 July 2021 12:38 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?