புதுக்கோட்டையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு அமமுகவினர் வரவேற்பு
அதிமுகவை காப்பாற்ற விரைவில் நீங்கள் வரவேண்டும் என்று தொண்டர்கள் கூறியதற்கு சிரித்துக் கொண்டே தலையாட்டினார் சசிகலா
HIGHLIGHTS
புதுக்கோட்டைக்கு வருகை தந்த சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு அமமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
அதிமுகவை காப்பாற்ற விரைவில் நீங்கள் வரவேண்டும் என்று தொண்டர்கள் கூறியதற்கு சிரித்துக் கொண்டே தலையாட்டிய சசிகலா சிறுவர்களுக்கு சாக்லேட் அளித்தார்பசும்பொன்னில் நடைபெற்றுவரும் தேவர் குரு பூஜையில் கலந்து கொண்டு விட்டு சசிகலா இன்று இரவு புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூருக்கு சென்றார்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.முதலில் சசிகலா வந்த பிரச்சார வேனுக்கு முன்பாக பெண்கள் பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்தனர்.இதன் பின்னர் தொண்டர்கள் அவருக்கு சால்வை பூங்கொத்து உள்ளிட்டவை அளித்து வரவேற்பளித்தனர்.
அப்போது பெண்கள் அதிமுகவை காப்பாற்ற விரைவில் நீங்கள் வர வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தினர் அதற்கு சசிகலா சிரித்துக் கொண்டே தலையசைத்தார். இதன் பின்னர் கூட்டத்தில் சிறுவர்களை பார்த்த சசிகலா அவர்களை அருகில் அழைத்து அவர்களுக்கு சாக்லேட் அளித்து உற்சாகப்படுத்தினார்.அவரை வரவேற்பதற்காக வந்திருந்த தொண்டர்கள் கையில் அதிமுக கொடி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தஞ்சையிலிருந்து மதுரைக்குச் சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் இதே இடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் வரவேற்பளித்தனர்.ஆனால் அவர் சசிகலாவை சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றார்.