/* */

சாந்தநாதசுவாமி கோவிலில் சோலார் மின்சாரம்: அமைச்சர் தொடக்கம்

கோவிலில் சோலார் பிளாண்ட் போட்டது மூலமாக கோவிலுக்கு மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் மீதமாகும்

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் புகழ் பெற்ற சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் சூரியசக்தி மூலமாக மின்சாரம் வழங்கும் திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோயில் மிகவும் சிறப்பு பெற்றதாகும்.இக்கோயிலில் மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின்சார கட்டணமாக செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் முழுவதுமாக இந்த கோயிலில் சோலார் பிளான்ட் மூலமாக விளக்குகள் எரிவதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.



இந்த முடிவை ஏற்று உபயதாரர்கள் மூலமாக ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 2 கிலோ வாட் 2 சோலார் பிளான்ட் கள் கோவிலின் மேல் தளத்தில் போடப்பட்டது. இந்த சோலார் பிளான்ட் மூலமாக 60 விளக்குகள் எரிய வைக்க முடியும். இந்த சோலார் மூலமாக கோவிலுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடக்கி வைத்தார். கோவிலில் சோலார் பிளாண்ட் போட்டது மூலமாக கோவிலுக்கு மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 Sep 2021 6:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!