/* */

புதுக்கோட்டையில் விநாயகர் சிலைகள் குளத்தில் கரைப்பு

புதுக்கோட்டையில், இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், புது குளத்திற்கு கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டன.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் விநாயகர் சிலைகள் குளத்தில் கரைப்பு
X

புதுக்கோட்டை, புது குளத்தில் கரைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவதற்கு, தமிழக அரசு தடை விதித்தது.

இந்நிலையில், புதுக்கோட்டையில் இந்து முன்னணி சார்பில், 5க்கும் மேற்பட்ட இடங்களில், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் வீட்டு வாசல் முன்பாக, விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, இன்று மாலை அனைத்து சிலைகளும், புது குளத்திற்கு கொண்டு வரப்பட்டு வரிசையாக நிறுத்தி, குளத்தில் கரைக்கப்பட்டன.

அப்போது, இந்து முன்னணி அமைப்பினர் ஜெய்காளி ஓம்காளி என்று கோஷமிட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்தினர். இதேபோன்று மாவட்டம் முழுவதும், நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பின்னர் கரைக்கப்பட்டன.

Updated On: 10 Sep 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்