/* */

தொடக்கப் பள்ளிகளைத் திறப்பதில் அரசு யோசித்து முடிவு எடுக்க வேண்டும்: உ. வாசுகி

பள்ளிகள் திறந்த பிறகு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கோவிட் தொற்று பரவுவதற்கு சமூக இடைவெளியைக்கடைபிடிக்காததே காரணம்

HIGHLIGHTS

தொடக்கப் பள்ளிகளைத் திறப்பதில் அரசு யோசித்து முடிவு எடுக்க வேண்டும்: உ. வாசுகி
X

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் மாநில நிர்வாகி உ.வாசுகி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் 9 முதல்12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் திறக்கப்பட்டவுடன், மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு தொடக்க மற்றும் (1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை) நடுநிலைப்பள்ளிகள் திறக்கும் முடிவை தமிழக அரசு நன்றாக யோசித்து எடுக்க வேண்டும் என்றார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவி உ. வாசுகி.

புதுதில்லியில் 21 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி, புதுக்கோட்டையில் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டதிற்கு அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவி வாசுகி தலைமை வகித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: புதுல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு மௌனம் காக்கிறது. இஸ்லாமிய பெண் என்பதால், மத்திய அரசு மௌனம் காக்கிறது என்று கருத வேண்டியுள்ளது.உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் கடந்த 2020 ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 7 மாதத்தில் 100 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கடந்த அதிமுக ஆட்சியில் ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை வைத்தது.

ஆனால், அந்த கோரிக்கையை அப்போதைய அரசால் நிராகரிக்கப்பட்டது. தற்போது சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்து, பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்கொடுமைகள் நடப்பதைத் தடுப்பதற்கு, ஒரு புதிய கொள்கை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளோம். அதிகாரிகளை மட்டும் வைத்துக் கொண்டு அந்தக் கொள்கைகளை உருவாக்க கூடாது. பெண்கள் அமைப்பை கலந்து ஆலோசித்தபிறகே, கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். விரைவில், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பதற்கு, புதிய கொள்கை ஒன்று தமிழக அரசு உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.பள்ளிகள் திறந்த பிறகு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தொற்று பரவி வருகிறது.சமூக விலகலை அவர்கள் கடைபிடிக்காததே முக்கியக் காரணம்.எனவே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளைத் திறப்பதில் அரசு நன்றாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றார் உ. வாசுகி.


Updated On: 9 Sep 2021 5:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?