அரசு ஊழியர் வீட்டில் பல கோடி சொத்து ஆவணங்கள்: லஞ்ச ஒழிப்பு துறை தகவல்

புதுக்கோட்டையில் அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் மேற்கொண்ட சோதனை.
புதுக்கோட்டையிலுள் அரசு ஊழியர்கள் வீட்டில் நேற்று காலை தொடங்கி அதிரடி சோதனை 16 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவில் முடிவடைந்தது.
புதுக்கோட்டையில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முருகானந்தம் வீட்டில் இருந்து 83 பவுன் தங்க நகைகள். 3 கிலோ 700 கிராம் வெள்ளிபாத்திரங்கள் 46 ஆயிரத்து 160 ரூபாய் ரொக்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
புதுக்கோட்டையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி அரசு ஊழியர் முருகானந்தம் மற்றும் அவரது மனைவி ஊராட்சி மன்றத் தலைவர் காந்திமதி வீட்டில் நேற்று காலை முதல் நடைபெற்று வந்த சோதனை 16 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவு முடிவடைந்தது. புதுக்கோட்டையில் மூன்று இடத்திலும் வெட்டன்விடுதி கிராமத்தில் மூன்று இடத்திலும் மொத்தம் ஆறு இடங்களில் சோதனையானது நடைபெற்றது.
இதில் வெட்டன்விடுதி கிராமத்தில் நடைபெற்று வந்த சோதனை நேற்று மாலை முடிவடைந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது வீடு அலுவலகம் உள்ளிட்ட மூன்று இடங்களில் சோதனை 15 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.இந்நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் அவரது வீட்டில் நடந்து வந்த சோதனை முடிவடைந்தது.
முருகானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்தி சோதனையில் 83 பவுன் தங்க நகைகள் 3 கிலோ 700 கிராம் வெள்ளி பாத்திரங்கள் 46 ஆயிரத்து 160 ரூபாய் ரொக்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், பல்வேறு விதமான சந்தை முதலீடுகள் உள்ள ஆவணங்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி மேல் நடவடிக்கை தொடங்கப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu