புதுக்கோட்டையில் திடீரென கொட்டித் தீர்த்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டையில்  திடீரென கொட்டித் தீர்த்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
X

புதுக்கோட்டையில் இன்று மாலை திடீரென பெய்த பலத்த மழை.

புதுக்கோட்டையில் திடீரென மாலை நேரத்தில் கொட்டித் தீர்த்த மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதுக்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு பலத்த மழை பெய்தது.

இந்த மலையானது புதுக்கோட்டை பொன்னமராவதி, கீரனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture