/* */

அரசு மகளிர் கல்லூரி விரைவில் கலைஞர் கருணாநிதி கல்லூரி என மாற்றப்படும் : ரகுபதி

தமிழகஅரசு கல்லூரிகளுக்கு தேiவான வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைப்பதற்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தி வருகிறது

HIGHLIGHTS

அரசு மகளிர் கல்லூரி விரைவில் கலைஞர் கருணாநிதி கல்லூரி என  மாற்றப்படும் : ரகுபதி
X

தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகக் கட்டடம் மற்றும் தமிழ்மொழி ஆய்வகத்தினை, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திங்கள்கிழமை திறந்து வைத்தார்

அரசு மகளிர் கலை கல்லூரி விரைவில் கலைஞர் கருணாநிதி கல்லூரி என பெயர் மாற்றப்படும் என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகக் கட்டடம் மற்றும் தமிழ்மொழி ஆய்வகத்தினை, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திங்கள்கிழமை திறந்து வைத்து பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உயர்கல்வித் துறையில் தமிழகம் சிறந்து விளங்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கல்லூரிகளுக்கு தேiவான வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைப்பதற்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தி வருகிறார்கள். புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில், ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகக் கட்டடம் மற்றும் தமிழ்மொழி ஆய்வகம் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் வீட்டின் கண்கள் மட்டுமல்ல நாட்டின் கண்கள்.மாணவிகள் தாங்கள் விரும்பும் படிப்பை பயில முழு சுதந்திரம் வழங்க வேண்டும்.பெண்களும் தங்களுக்கு தேவையான துறையை தேர்ந்தெடுத்துப் பயின்று உயர்பதவிக்கு வரவேண்டும்.அரசு மகளிர் கலைக்கல்லூரி இனிமேல் அதன் பழைய பெயராகிய கலைஞர் கருணாநிதி கல்லூரி என அழைக்கப்படுவதற்கு ஆவன செய்யப்படும்.

இக்கல்லூரியின் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும். விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு நமக்கு நாமே திட்டத்தில் பணி மேற்கொள்ளப்படும்.குடற்புழு நீக்க மாத்திரையை மாணவிகள் அனைவரும் உட்கொள்ள வேண்டும்.இதன்மூலம் மாணவர்களுக்குத் தேவையான கற்றல், கற்பித்தல் திறன்களை மேம்படுத்தவும், மாணவர்களிடையே நடத்தப்படும் தேர்வுகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள முடியும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், கல்லூரி முதல்வர் முனைவர் புவனேஸ்வரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். உதவி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஜானகி நன்றி தெரிவித்தார்.

Updated On: 14 March 2022 1:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்