புதுக்கோட்டையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தந்தை மகன் படுகாயம்

புதுக்கோட்டையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தந்தை மகன் படுகாயம்
X

புதுக்கோட்டை ராஜ கோபாலபுரத்தில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தந்தை-மகன் படுகாயமடைந்தனர்

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து படுகாயமடைந்த தந்தை மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் 2வது தெருவில் உள்ள வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், தந்தை, மகன் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை, ராஜகோபாலபுரம் இரண்டாம் வீதியில் பாண்டியன் (63) , மனைவி லட்சுமி(50) ஆகியோர் தனது இவர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.மூத்த மகன் ஆனந்த குமாருக்கு திருமணமாகி ஷீபா என்ற மனைவியும் கைலாஷ் பாண்டியன்( 7 ), சிவலிங்கம்(5 ) ஆகிய 2 மகன்கள் உள்ளனர் இரண்டாவது மகன் அசோகிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பாண்டியனின் வீட்டின் மாடியில் மழைநீர் தேங்கி, வீட்டின் கட்டிடம் ஈரம் காத்திருந்தது. இந்நிலையில், பாண்டியனும் அவரது இரண்டாவது மகன் அசோக்கும் இன்று வீட்டில் அமர்ந்திருந்த போது திடீரென மேற்கூரை முற்றிலுமாக இடிந்து அவர்கள் மீது விழுந்தது.

இதில் பாண்டியனும் தனது மகன் அசோக்கும், கட்டிட இடிபாடுகளிடையே சிக்கிக்க் கொண்டனர். இடிந்து விழுந்த சப்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து பார்த்தபோது இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த பாண்டியன் மற்றும் அசோக்கை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பாண்டியனின் மனைவி லட்சுமி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்ததாலும் மற்றும் பாண்டியனின் மூத்த மகன் ஆனந்த் குமார்(40) அவரது மனைவி (30) மற்றும் (7) சிவலிங்கம்(5) ஆகியோர் வெளியே சென்றதால் அதிருஷ்ட வசமாக இந்த விபத்தில் இருந்து தப்பினர்.

தகவலறிந்த, புதுக்கோட்டை தாசில்தார் செந்தில்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா, புதுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து படுகாயமடைந்த தந்தை மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story