/* */

போதை மாத்திரைகள் ,ஊசிகள் வைத்திருந்தவர் கைது

போதை மாத்திரைகள் ,ஊசிகள் வைத்திருந்தவர் கைது
X

புதுக்கோட்டையில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் சிலர் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி வைத்திருந்ததாக காமராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன்(28) என்ற இளைஞரை கைது செய்து அவரிடம் இருந்த 10 போதை மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து வெங்கடேஸ்வரனை நீீீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நீதிபதி உத்தரவின் பேரில் அவரை திருமயம் கிளை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து புதுக்கோட்டை நகர் பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்று வேறு யாரேனும் போதை மாத்திரைகள் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்தும் சட்ட விரோதமாக மாத்திரைகள் விற்பனை செய்யும் நபர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 6 March 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  2. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  3. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..
  7. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  8. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை