ரூ 5.5 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி: அறந்தாங்கி எம்எல்ஏ திறந்து வைப்பு

ரூ 5.5 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி:  அறந்தாங்கி எம்எல்ஏ திறந்து வைப்பு
X

 புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

கோபாலபட்டினம் கிராமத்தில் 1400 குடும்பங்கள் பயன் பெறும் வகையில் புதிதாக மின்மாற்றி நிறுவப்பட்டது

ஆவுடையார் கோவில் தாலுகா, நாட்டானி புரசக்குடி ஊராட்சியில் ரூ 5.5 லட்சம் மதிப்பில் புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றிய பகுதியில் உள்ள நாட்டானி புரசக்குடி ஊராட்சியில் கோபாலபட்டினம் என்ற கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் 1400 குடும்பங்கள் பயன் பெறும் வகையில் ரூ 5.5 லட்சம் மதிப்பில் புதிதாக மின்மாற்றி நிறுவப்பட்டது. புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவி சீதாலட்சுமி துணைத்தலைவர் தாஹிர்,மீமிசல் ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture