ஊதியம் வழங்க வலியுறுத்தி அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதியம் வழங்க வலியுறுத்தி   அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

அறந்தாங்கி அடுத்த ஆவுடையார் கோவில் அருகில் உள்ள அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் சம்பளம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து அறந்தாங்கி அரசு கல்லூரி கௌரவ விரவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து அறந்தாங்கி அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு கடந்த 3 மாத காலமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைைகழகம் ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் தற்காலிக கெளரவ விரிவுரையாளர் மற்றும் அலுவலக பணியாளர்களின் நிலைமையை பல்கலைகழகத்துக்கு உணர்த்தும் வகையிலும் ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தியும் கௌரவ விரிவுரையாளர்கள் அலுவலக பணியாளர்கள் கல்லூரி வாயிலருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story