Begin typing your search above and press return to search.
அம்மா உணவகத்திற்கு ஒரு லட்சம் நிதி வழங்கிய காங்கிரஸ் எம்எல்ஏ
கொரோன வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதித்து வீடுகளுக்கு முடங்கி உள்ளனர். இந்நிலையில் சாலையில் சுற்றித்திரியும் முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு கிடைக்காமல் மிகுந்த சிரமப்பட்டு வந்த நிலையில் தற்போது சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இலவசமாக காலை மதியம் இரண்டு வேலைக்கு உணவு வழங்குவதற்கு, அறந்தாங்கி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், தன்னுடைய சட்டமன்ற உறுப்பினரின் முதல் மாத சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை நகராட்சி நிர்வாகத்திடம் வழங்கினார்.