/* */

டெல்லி கொரோனா நோயாளிகளுக்காக மொய் விருந்து நடத்திய டீ கடை அதிபர்

டெல்லி கொரோனா நோயாளிகளுக்கு உதவ, டீக்கடை அதிபர் மொய் விருந்து நடத்தி பொதுமக்களிடம் நிதி வசூல் செய்தார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை அருகே உள்ள வம்பன் 4 ரோட்டில் கடந்த பத்தாண்டுகளாக பகவான் என்ற பெயரில் டீ கடை நடத்தி வரும் சிவக்குமார், கஜா புயல் பாதித்த போது அப்பகுதி மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு அவர் டீ கடையில் வைத்த வாடிக்கையாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்தார்,

மேலும் அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அந்த பகுதி வறட்சியான சூழ்நிலையை உணர்ந்து செம்மரம், சந்தன மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிய சிவகுமார் கடந்த கொரோனா முதல் அலையில் இருந்து தற்போது வரை கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் பொது மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அப்பகுதியைச் சேர்ந்த பச்சிளம் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக கொரோனா இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்து வரக்கூடிய இந்தசூழ்நிலையில் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உயிருக்குப் போராடி வரும் பொது மக்களை காக்க அவரது டீக்கடையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மொய் விருந்து என்ற பெயரில் நிவாரணம் வசூல் செய்யப்படும் என்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு பத்திரிக்கை அடித்து சுவரொட்டி ஒட்டியுள்ளார்.

இதனையடுத்து இன்று அவர் கடையில் தேநீர் குடிக்க வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கொரோனாவால் உயிருக்குப் போராடி வரும் பொது மக்களை காக்க அவர்களால் இயன்ற நிவாரண தொகை வழங்கி டீக்கடை உரிமையாளர் சிவகுமாரை பாராட்டி சென்றனர்.

Updated On: 5 May 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  5. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  6. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு