/* */

அமைச்சர் மெய்யநாதன் பிறந்தநாள்: குளக்கரையில் திமுகவினர் மரம் நடவு

பிறந்தநாளுக்கு பிளக்ஸ் பேனர்களை தவிர்த்து நாட்டு மரங்களை நட்டு வைத்து வளர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்

HIGHLIGHTS

அமைச்சர் மெய்யநாதன் பிறந்தநாள்: குளக்கரையில் திமுகவினர்   மரம் நடவு
X

அமைச்சர் மெய்யநாதன் பிறந்தநாளை முன்னிட்டு குளக்கரைகளில் மரக்கன்றுகள்   நட்டு வைத்த திமுக நிர்வாகிகள் 

அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் தற்போது மரக்கன்றுகள் நடும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அதேபோல் சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமும் மரக்கன்றுகள் வளர்ப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தபட்டு வருகின்றனர்.

இதனால் தற்பொழுது, பொதுமக்களிடம் மரக்கன்றுகள் வளர்க்கும் ஆர்வம் ஏற்பட்டு அதிக அளவில் மரக்கன்றுகளை நடும் பணியில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சமூக ஆர்வலர்களும் மூலம் குளக்கரைகளில் பனை விதைகளை நடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற சிவ.வீ. மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் வளர்ப்பு குறித்த அவசியத்தை எடுத்துக்கூறி, அதிகளவில் மரக்கன்றுகள் நடுவதற்கு அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இன்று (செப். 9 ) தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தனது தொகுதி மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். அதில் தன்னுடைய பிறந்தநாளுக்கு பிளக்ஸ் பேனர்களை தவிர்த்துவிட்டு, நாட்டு மரங்களை நட்டு வைத்து வளர்க்க வேண்டுமென தெரிவித்திருந்தார்..

அதனை கடைபிடிக்கும் விதத்தில், இன்று புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட வல்லவாரி ஊராட்சியில் கட்சி நிர்வாகிகள், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பிறந்தநாளை முன்னிட்டு, குளக்கரைகளில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி, அப்பகுதி முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை நடத்தினர். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.


Updated On: 9 Oct 2021 7:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’