/* */

ஆலங்குடி அருகே தைல மரக்காட்டில் தீ, 2 ஏக்கர் மரங்கள் எரிந்து நாசம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஆயிப்பட்டி கிராமத்தில் தைல மரக்காட்டில் மரங்கள் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் ஏக்கர் பரப்பில் இருந்த மரங்கள் எரிந்து நாசமாகியது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆயிப்பட்டி கிராமத்தில் லட்சுமிநாராயணன் என்பவருக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் பரப்பளவிலான யூகலிப்டிஸ் எனப்படும் தைல மரக் காடு உள்ளது.

இந்நிலையில் இந்த தைல மரக் காட்டில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் இரண்டு ஏக்கருக்கு மேலான தைல மரங்கள் தீயில் எரிந்து நாசமாயின.இந்த தீ விபத்தை பார்த்த அருகே இருந்தவர்களும் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இதனால் எஞ்சிய தைல மரங்களும், அருகே இருந்த மின்மாற்றியிலும் தீ விபத்து ஏற்படாமலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தைல மரக் காட்டின் மேல் செல்லும் உயரழுத்த மின் கம்பிகள் மூலமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது சமூக விரோதிகள் வேறு யாரேனும் தீவைத்து விட்டு சென்றனரா என்பது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 April 2021 12:30 PM GMT

Related News