/* */

நெம்மக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசல் முன்பு துணியால் மேற்கூரை

தமிழகத்தில் முதல் முறையாக நெம்மக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் முன்பு துணியால் மேற்கூரை அமைக்கப்பட்டது.

HIGHLIGHTS

நெம்மக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசல் முன்பு துணியால் மேற்கூரை
X

தமிழகத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் முன்பு துணியால் மேற்கூரை அமைக்கப்பட்டது.

தமிழகத்திலேயே அதிகப்படியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி தற்போது வரை 50க்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட நெம்மக்கோட்டை சித்தி விநாயகர் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு எழுபத்தி இரண்டாம் ஆண்டு மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்டை கோட்டாட்சியர் அபிநயா தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் குடும்பத்தார்கள் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் புதுக்கோட்டை தஞ்சாவூர், பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் மாற்றம் 300 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.

மூன்று பிரிவாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கம் வீரர்களுக்கும் வீரர்கள் பிடியிலிருந்து சிக்காமல் செல்லும் காளைகளுக்கும் அண்டா, குண்டா, பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, தங்க நாணயம், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் வெயிலின் தாக்கத்தினால் சோர்வடையாமல் இருப்பதற்கு வாடிவாசல் மேலே துணியால் பந்தல் அமைக்கப்பட்டு போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 April 2022 10:19 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  2. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  3. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  5. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  6. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  7. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...
  8. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  9. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...