தூத்துக்குடியில் மேலும் 2 அலகுகளில் மின் உற்பத்தி

தூத்துக்குடியில் மேலும் 2 அலகுகளில் மின் உற்பத்தி
X

கோப்பு படம் 

நிலக்கரி வந்ததால் தூத்துக்குடியில் மேலும் 2 அலகுகளில் மின்உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறனுடைய 5 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமாக 1050 மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்கிறது.

நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கையிருப்பு உள்ள நிலக்கரி கொண்டு ஆலையின் பிரிவுகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 2,3 அலகுகள் இயக்கப்படாமல் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நிலக்கரி வந்ததால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மேலும் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. ஏற்கனவே முதல் அலகு செயல்பட்டு வந்த நிலையில், 2,3 அலகுகளும் இயங்க துவங்கியுள்ளதால் 630 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது

4,5 ஆவது அலகு தொடர்ந்து செயல்படாததால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?