Poochi Murugan மற்றவர்களுக்கு உதவுவதில் முதலிடம் அளிப்பவர் பூச்சி முருகன்...படிச்சு பாருங்க...

Poochi Murugan  மற்றவர்களுக்கு உதவுவதில் முதலிடம்  அளிப்பவர் பூச்சி முருகன்...படிச்சு பாருங்க...
X
Poochi Murugan பூச்சி முருகனின் தந்தை சிவசூரியன், தன்னை நாடகத்தில் நாரதராக நடிக்க வைத்தார் என்றும் பூச்சி முருகனை சிலர் பூச்சி என கூப்பிடும் நிலையில் தாம் முருகன் என்றே அழைப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Poochi Murugan

சினிமா உலகில் இருப்பவர்களில் பலர் தங்களுடைய வாரிசுகளையும் அதே துறையில் நுழைப்பது வழக்கம். இதுதான் அக்காலம் முதல் இக்காலம் வரை தொடர்ந்து நடந்து வரும் நடைமுறை. சினிமா உலகில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகராக விளங்கிய சிவசூரியன் தன்னுடைய மகனை சினிமாவில் வேண்டாம் என்று அரசியலில் ஈடுபடுத்தினார். தமிழக வீட்டு வசதி வாரிய தலைவராக உள்ள பூச்சி முருகன்தான் அவர்.

Poochi Murugan


பூச்சி முருகனின் தந்தையார் சிவசூரியன் துாத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவராம மங்களம் என்ற சிற்றுாரில் 1927 ம் ஆண்டு பிறந்தவர். தாயார் வடிவு. தந்தை சிதம்பரத்தேவர். இவருக்கு சிவசுப்பு என்ற தம்பியும் சிவசூரிய வடிவு என்ற சகோதரியும்உள்ளனர். ஏழாம் வகுப்பு வரை தான் படித்துள்ளார்.அதன் பின்னர் நடிப்பில் ஆர்வம் காட்டினார். இளம் வயதிலேயே பல நாடகங்களில் நடித்தார். பின் சினிமாவில் நுழைந்தார். மேலும் மந்திரிகுமாரி துவங்கிபல முன்னணி நடிகர்கள் நடித்த சினிமாக்களில் நகைச்சுவை நடிகராக சிவசூரியன் நடித்துள்ளார்.

இவருடைய பேச்சு முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் கருணாநிதி ஆகியோருக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. அதனால்தான் இருவருக்கும் மிக நெருக்கமானவராக சிவசூரியன் இருந்தார். இதனால் இவருக்கு நிறைய படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது,எந்த கதாபாத்திரம் என்றாலும் அதே பாத்திரமாகவே மாறி நடிக்கும் திறமை கொண்டவர் சிவசூரியன். இவருடைய மகன் தான் பூச்சி முருகன். இவருக்கு பூச்சி எப்படிவந்தது என்றால் தன் தந்தையைப் போலவே முருகனும் ஆரம்ப காலத்தில் நாடகத்தில் நடித்து வந்தார். நாடகங்களில் பூச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்த காரணமாக இவருக்கு பூச்சி என்ற அடைமொழி வந்தது. பின் இவர் பூச்சி முருகன் என்று வைத்துக்கொண்டார்.

Poochi Murugan



பூச்சிமுருகனின் வேலை

இவருக்கு நிரந்தரமான வேலை வருமானம் இல்லை என்பதால் இவரது தந்தை சிவசூரியன் எம்ஜிஆரை சந்தித்து ஏதாவது ஒரு அரசு வேலை வாங்கிக்கொடுங்க என்று வேண்டுகோள் விடுத்தார். நட்பின் காரணமாக எம்ஜிஆரும் வேலைக்கு ஏற்பாடு செய்ய முயற்சித்தார். அப்போது பூச்சி முருகன் பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை என்பது தெரிந்தது. பின் எம்ஜிஆர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய துறையின் கடைநிலை ஊழியர் வேலையை கொடுத்தார். அண்ணா சாலையில் உள்ள நந்தனத்தில் தன்னுடைய வேலையைத்துவக்கினார் பூச்சிமுருகன்.

பின்னர் தன்னுடைய நேர்மை மற்றும் சுறுசுறுப்பான குணத்தின் காரணமாக இவர் டெஸ்பாட்ச் கிளார்க்காக பதவிஉயர்வு பெற்றார். பின்னர் அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர் என்பதால் இவருக்கு திருமணமும் நடந்தது. எம்ஜிஆரின் மறைவுக்கு பின் இவர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். திமுகவில் தீவிர கட்சித்தொண்டனாகவும், கலைஞர் குடும்பத்துக்கு நெருங்கிய நண்பராகவும் ஆனார். யாருடைய அனுமதியும் இன்றி வீட்டுக்குள் செல்லக்கூடிய அளவில் இவருக்கும் கருணாநிதி குடும்பத்தினருக்கும் பந்தம் இருந்தது.

கலைஞரின் வீட்டில் அனைவரிடமும் நன்றாக பழகி அவர்களுக்கு தேவையான வேலைகளைச் செய்து வந்தார். நம்பிக்கையான மனிதனாக வலம் வந்தார். ஸ்டாலின் மேயராக ,துணை முதல்வராக இருந்தபோது மெய்க்காப்பாளராக இருந்தவர் பூச்சி முருகன்தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வசதி வாய்ப்புகள் வந்தபோதும் தனக்கென்று எதுவுமே வாய்விட்டு கேட்காதவர் பூச்சிமுருகன்.

Poochi Murugan


ஸ்டாலினின் பரிசு

முதல்வர் ஸ்டாலின் இவருக்கு தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் பதவியை அளித்துள்ளார். அதுவும் அவரது மகளின் திருமணநாளுக்கு முதல் நாள் இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டதால் இது முதல்வரின் பரிசு என்று கூட சொல்லலாம்.

மேலும் இவர் அறிவாலயத்துக்கு வெளியூரிலிருந்து வருபவர்களிடம் எதற்காக வந்துள்ளார்கள் என கேட்டு அதனை உரியவரிடம் அனுப்பும் பொறுப்பினை பக்குவமாக செய்து முடிக்ககூடியவர். முதல்வர் கலைஞர், ஸ்டாலின், பேராசிரியர், அமைச்சர்கள் மற்றும்நிர்வாகிகள் யார் அறிவாலயத்துக்கு வருகிறார்கள் என்றாலும் அவர்களை வரவேற்கும் முதல் ஆளாக பூச்சி முருகன் அவர்கள் இருப்பார்கள் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

பூச்சி முருகனின் தந்தை சிவசூரியன், தன்னை நாடகத்தில் நாரதராக நடிக்க வைத்தார் என்றும் பூச்சி முருகனை சிலர் பூச்சி என கூப்பிடும் நிலையில் தாம் முருகன் என்றே அழைப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இவருடைய இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது இந்த கல்யாணம் ஒரு கட்டுப்பாட்டோடு நடந்துகொண்டிருக்கிறது என்று பலருக்கும் தெரியாது.

கொரோனாவுக்காக கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்திய நிலையில் அந்த கட்டுப்பாட்டுக்குள்தான் இந்த திருமணமானது நடந்துள்ளது. இந்த கொரோனா பரவல் இல்லாமல் இருந்திருந்தால் அண்ணா அறிவாலயத்தில் சூழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு நிற்கவே இடம் இல்லாத நிலை உருவாகியிருக்கும். எனவே அரசு கட்டுப்பாட்டோடு திருமணம் நடத்திய பூச்சி முருகனுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பேசினார். அவர் நினைத்திருந்தால் பலரையும் அழைத்திருக்கலாம் ஆனால் கட்டுப்பாடு என்பதைக் கடைப்பிடித்து முக்கியமானவர்களுக்கு மட்டும் கொரோனா காலங்களில் அழைத்து தன் மகள் திருமணத்தினை நடத்திமுடித்துள்ளார் பூச்சிமுருகன்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?