/* */

குன்னம் அருகே புது வேட்டக்குடியில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

குன்னம் அருகே புது வேட்டக்குடியில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

குன்னம் அருகே புது வேட்டக்குடியில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
X

குன்னம் அருகே மர்ம நபர் பெண்ணிடம் நகை பறித்து சென்ற வீடு.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி வெண்ணிலா(26). நேற்று இரவு அவர்களது வீட்டின் திண்ணையில் படுத்து உறங்கியுள்ளார்.

நள்ளிரவு நேரத்தில் முகத்தை துணியால் மூடிய 4 மர்ம நபர்கள் வெண்ணிலாவின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். வெண்ணிலா சத்தம் போடவே அவரது கணவர் செல்வராஜ் எழுந்து ஓடி, விரட்டி சென்றார்.

மர்ம நபர்கள் தாக்கியதில் செல்வராஜுக்கு கையில் காயம் ஏற்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 27 Oct 2021 4:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...