/* */

குன்னம் அருகே ஒகளூர் கிராமத்தில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஒகளூர் கிராமத்தில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குன்னம் அருகே  ஒகளூர் கிராமத்தில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்
X

மனைவி முத்து லட்சுமி மற்றும் குழந்தையுடன் ஆறுமுகம் (பழைய படம்)

பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமம், அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் .கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துலெட்சுமி (வயது45) இவர்களுக்கு 3 பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது, இந்நிலையில் வீட்டில் முத்து லெட்சுமி சமையலுக்காக இறைச்சியை வெட்டி கொண்டிருக்கும் போது கணவர் ஆறுமுகம் மற்றும் முத்துலெட்சுமிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் மனைவி இறைச்சி வெட்ட வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவியின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் முத்துலெட்சுமி துடி துடித்து உயிரிழந்தார். இதனையடுத்து ஆறுமுகம் மனைவியின் கழுத்தை வெட்டியதாக அருகே இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்,அவர்கள் வீட்டில் சென்று பார்த்தபோது முத்துலட்சுமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக மங்கலமேடு காவல் துறைக்கு, அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து இறந்த முத்துலட்சுமி உடலை மீட்டு பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, கொலை நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு பிள்ளைகள் இருக்கும் நிலையில் கணவன் மனைவியை கொன்ற சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மங்களமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வவருகின்றனர்.

Updated On: 14 Feb 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது