/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 15-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 15-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 15-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்
X

பெரம்பலூர் மாவட்டத்தில் 190 சிறப்பு தடுப்பூசி மையங்களில் 15ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நாளை (18.12.2021) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இம்முகாம்களில் 25,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள், 22 அங்கன்வாடி மையங்கள், 46 பள்ளிகள், 32 துணை சுகாதார நிலையங்கள், 28 கிராம பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட 29 இடங்களில் சிறப்பு முகாம்கள் என மாவட்டத்தில் இதற்கென பெரம்பலூர் வட்டாரத்தில் 45 தடுப்பூசி மையங்களும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 48 தடுப்பூசி மையங்களும், ஆலத்தூர் வட்டாரத்தில் 46 தடுப்பூசி மையங்களும், குன்னம் வட்டாரத்தில் 51 தடுப்பூசி மையங்களும் என மொத்தம் 190 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 600 க்கும் மேற்பட்ட நபர்கள் மக்களை ஒருங்கிணைத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு வீட்டிலும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணைக்கு உள்ளவர்களும் தாமே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Updated On: 17 Dec 2021 3:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’