/* */

லாரியும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலி

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் எதிரே வந்த சரக்குவேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

HIGHLIGHTS

லாரியும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலி
X

பைல் படம்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள கோவிந்தராஜபுரம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் மற்றும் பெரம்பலூர் திருநகரில் வசித்து வருபவர் குணாலன். நண்பர்களான இருவரும் நேற்று இரவு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியிலிருந்து பெரம்பலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இவர்கள் பயணித்த இருசக்கர வாகனம் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் நாற்கரங்கொட்டாய் என்ற இடத்தில் வந்தபோது எதிரே பெரம்பலூரிலிருந்து ஆத்தூர் நோக்கி சென்ற சரக்கு வாகனம் (ஈச்சர் வேன்) மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் நண்பர்கள் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து ஏற்படுத்திய வாகனத்தை சிறிது தூரத்தில் நிறுத்தி விட்டு, அதன் ஓட்டுனர் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே விபத்து நடந்த இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குபதிந்த போலீஸார் தப்பியோடிய சரக்கு வேனின் ஓட்டுநரை தேடி வருகின்றனர். விபத்து காரணமாக பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 16 Feb 2022 5:43 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!