/* */

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு பெரம்பலூரில் வீரர்கள் தேர்வு

திருப்பத்தூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு பெரம்பலூரில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு பெரம்பலூரில்  வீரர்கள் தேர்வு
X

மாநில போட்டிக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான கிரிக்கெட் போட்டி பெரம்பலூரில் நடந்தது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் நடத்தும் பன்னிரண்டாவது ஸ்டேட் சாம்பியன் ,ராஜா ராணி டிராபி ,19 வயது உடைய இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது . இதில் திருச்சி அரியலூர், பெரம்பலூர் ,வேலூர் ,கடலூர், கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளம் வீரர்கள் பங்கு பெறுகிறார்கள்.

பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்காக இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற இன்று பெரம்பலூர் மிராக்கல் கிரிக்கெட் அகாடமி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சியாளர் பழனிச்சாமி தலைமையில் வீரர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் பங்கேற்றனர்.

தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் நாளை நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வார்கள். இப்போட்டியில் திறமையாக விளையாடும் வீரர்கள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியிலும் பங்கு பெற அதிக வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

Updated On: 22 Oct 2021 12:36 PM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  2. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  3. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  6. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  7. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  8. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  9. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  10. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...