பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியன் மற்றும் அவரது குழுவினரான காவல் ஆய்வாளர் விஜயலெட்சுமி உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் தலைமைக் காவலர் மருதமுத்து ஆகியோர்கள் இணைந்து பெரம்பலூர் மாவட்டம் தேனூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் அப்போது எடுத்து கூறினார்கள்.
மேலும் குழந்தை தொழிலாளர் முறையை குறித்தும், உங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளர் முறை இருந்தால் அதனை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கவுன்சிலிங் நிபுணர் பிரேமா, அங்கன்வாடி மைய ஆசிரியர், தேனூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu