பெரம்பலூர் அருகே பொது மக்களிடம் காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் அருகே பொது மக்களிடம்  காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

பெரம்பலூர் அருகே களரம்பட்டியில் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

பெரம்பலூர் அருகே களரம்பட்டியில் பொது மக்களிடம் போலீசார் பெண்கள் பாதுபாப்பு பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி கிராம பொது மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் காவலன் SOS செயலி குறித்தும் குழந்தை திருமணம் குறித்தும் பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர். விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story
ai in future agriculture