/* */

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: மாணவர்கள் பங்கேற்க கலெக்டர் அழைப்பு

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாணவர்கள் பங்கேற்க பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி:  மாணவர்கள் பங்கேற்க கலெக்டர் அழைப்பு
X
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா.

தமிழ் வளர்ச்சித் துறையினரால் நடத்தப்பெறும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, தெரிவித்துள்ளார்.

இலக்கியங்கள் அனைத்திலும் சிறந்ததும் உன்னதமானதும் மனிதகுலம் அனைத்திற்கும் தன்னிகரற்ற படைப்பு திருக்குறள். அத்தகைய சிறப்புமிக்க அறக்கருத்துக்களடங்கிய திருக்குறட்பாக்களை மாணவர்கள் இளம்வயதிலேயே மனப்பாடம் செய்தால் அவை பசுமரத்தாணிபோல் பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும். தாம் பெறுகின்ற கல்வியறிவோடு, நல்லொழுக்கம் மிக்கவர்களாக மாணவர்கள் உருவாக வழிவகுக்கும். எனவே, திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவச் செல்வங்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டுவது, மாணவர்களின் நல்வாழ்வுக்குத் துணை நிற்பதாகவும், திருக்குறள் நெறிவழிவகுப்பதாகவும் அமையும். அதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு தலா ரூ.10,000/- வீதம் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப் பெறுகின்றனர்.

திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுக்கு கலந்துகொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்யப்பெற்று பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப் பெறுவார்கள். திறனாய்வு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தமிழ் வளர்ச்சித் துறையினரால் நடத்தப்பெறும். திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு பெறுவதற்கு 1330 திருக்குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும், இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும், திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்தவராக இருத்தல் வேண்டும், பெரம்பலூர் வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் பயில்பவராக இருத்தல் வேண்டும், அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பதின்மப் பள்ளிகள் போன்ற பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம். தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப் பெறும் இப்பரிசினை இதற்கு முன்னர் பெற்றவராக இருத்தல் கூடாது, திருக்குறளின் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்பெறும்.

மேற்குறிப்பிட்டவாறு, திருக்குறள் முற்றோதும் திறன் படைத்த மாணவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அமைந்துள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலகத் தொலைபேசி எண் 04328-225988-லும் adtamildept@gmail.com என்ற வலைதளத்திலும் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்ப. ஸ்ரீ வெங்கட பிரியா, தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Nov 2021 2:37 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  2. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  3. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..
  7. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  8. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை