நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
X

பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் கைதுசெய்யப்பட்ட வாலிபர் அரவிந்த்.

விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம் பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தது

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம், கட்ராங்குளத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் அரவிந்த் ( 23). இவர் கடந்த 2019 -ஆம் ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி, பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தின் மூலம் 3 ஆண்டு சிறை தண்டனையும், 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சிறையில் இருந்த அரவிந்த் ஜாமீனில் வெளியே வந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம், பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து, அரவிந்த் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் அரவிந்தை கைது செய்து ஆஜர்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த அரவிந்தை அரும்பாவூர் போலீசார் கைது செய்து பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags

Next Story
ஆப்பிள் iOS 18.1 நினச்சுகூட பாக்கமுடியாத அம்சங்களுடன்...!