/* */

இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது

7 லட்சம் மதிப்புள்ள நகை வெள்ளி பொருட்களை அதிரடியாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறையினருக்கு பாராட்டு.

HIGHLIGHTS

இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது
X

7 லட்சம் மதிப்புள்ள நகை வெள்ளி பொருட்கள் 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அல்லிநகரம் கிராமத்தில் கடந்த ஜூன் 8-ந்தேதி அன்று அதிகாலை வயதான தம்பதியான பெரியசாமி அவரது மனைவி அறிவழகி வீடு புகுந்து தாக்கி கொடூரமாக இருவரையும் கொலை செய்து, வீட்டிலிருந்த 16 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், டிவி உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

நகைக்காக நடந்த இரட்டை கொலை சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மணி அறிவுறுத்தலின் படி இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் குற்ற வழக்கில் தொடர்புடைய சந்துரு, மகேஷ், யுவராஜ் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் முதலில் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து குற்றவாளிகளை விசாரித்ததில் ஏற்கனவே இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும், விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான அப்பு, சத்யா, மணிகண்டன் ஆகிய மூவர் என மொத்தம் 6 பேரை இந்த இரட்டை கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடமிருந்து 16 பவுன் நகை, வெள்ளி கொழுசு, பணம், எல்.இ.டி டிவி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து இன்று பெரம்பலூர் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் மகளான சத்யாவிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி ஒப்படைத்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக துரிதமாக செயல்பட்ட தனிப்படை குழுவினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Updated On: 5 Aug 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!