/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் 17-ம் தேதி பட்டா பிழை திருத்த சிறப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 17-ம் தேதி பட்டா பிழை திருத்த சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் 17-ம் தேதி பட்டா பிழை  திருத்த  சிறப்பு முகாம்
X

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் (பைல் படம்)

வருவாய்த்துறை அமைச்சர் தமிழக சட்டப்பேரவையில் "விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்துதல், அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் இவ்வரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு 2022 பொங்கல் திருநாளுக்குள் அனைத்து கிராம மக்களும் பயன்பெற வழிவகை செய்யப்படும்" என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இணையவழி தமிழ்நிலம் மென்பொருள் பதிவுகளில் ஏற்பட்ட எளிய பிழைகளை திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் 17.11.2021 அன்று பெரம்பலூர் வட்டத்தில் செங்குணம் வருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு செங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை வட்டத்தில், பூலாம்பாடி(கிழக்கு), பூலாம்பாடி(மேற்கு) வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு பூலாம்பாடி பேரூராட்சி அலுவலகத்திலும், குன்னம் வட்டத்தில அத்தியூர்(வடக்கு), அத்தியூர்(தெற்கு) வருவாய் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு அத்தியூர் கிராம நிருவாக அலுவலர் அலுவலகத்திலும், ஆலத்தூர் வடடம், சிறுவயலூர் வருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறுவயலூர் புதுவாழ்வுத்திட்ட அலுவலகத்திலும் இம்முகாம் நடைபெற உள்ளது.

எனவே இந்த சிறப்பு முகாமினை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Updated On: 16 Nov 2021 12:33 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  3. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  6. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  7. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  8. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  10. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா