/* */

பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீசாரால் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அரசு காவல்துறை போக்குவரத்து பிரிவு சார்பில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் டெய்சிராணி தலைமையில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுப்பையன் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை பற்றியும், அதை பின்பற்றுவதைப் பற்றியும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் பள்ளி அளவில் சாலை பாதுகாப்பு குறித்து நடைப்பெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கி வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆசிரியர்கள் சுந்தரவடிவேல், திருநாவுக்கரசு, சீனிவாசன், சாந்தியம்மாள் , உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் , ஆசிரியர் சிவானந்தம் , உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Oct 2021 11:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்