/* */

வேப்பந்தட்டை பகுதியில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் கொரோனா ஊரடங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

வேப்பந்தட்டை பகுதியில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு
X

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் கொரோனா ஊரடங்கு விதி முறைகள் பின்பற்றவது குறித்து தாசில்தார் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் ஊரடங்கு தளவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பெரும்பாலான பகுதிகளில் மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமால் இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் உள்ள சாலையோர கடைகளிலும் தனியார் வங்கிகளிலும் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம் கொரோனாவை மறந்து சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தனர்.

அதனை அவ்வழியே கொரோனா விழிப்புணர்வு வாகனத்தின் மூலம் வருகை தந்த வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் தனியார் வங்கி முன்பாக சமூக இடைவெளியை பின்பற்றாமல் நிரம்பியிருந்த கூட்டத்தை கொரோனா பரவல் பற்றி எடுத்துரைத்து மக்களை சமூக இடைவெளியை பின்பற்ற வைத்ததுடன் இதை முறையாக கவனிக்க தவறிய வங்கி மேலாளரை எச்சரித்து சென்றார்.

Updated On: 8 Jun 2021 11:45 AM GMT

Related News