/* */

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் லேப்டாப் திருடியவர் கைது

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணி வைத்திருந்த லேப்டாப் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் லேப்டாப் திருடியவர் கைது
X

சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் யோகேஷ்வரன். இவர் 12.09.2021-ம் தேதி கல்லூரி செல்வதற்காக புறப்பட்டு சென்னை -திருச்சி பஸ்சில் ஏறினார்.இரவு 09.30 மணிக்கு பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் தனது இருக்கையில் லேப்டாப்பை பையுடன் வைத்துவிட்டு, டீ குடிக்க இறங்கினார். டீ குடித்து விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது லேப்டாப் பையை காணவில்லை.

இதுபற்றி யோகேஷ்வரன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைப் பெற்ற பெரம்பலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பழனிச்சாமி துரிதமாக செயல்பட்டு புதிய பஸ் நிலையம் சென்று பார்க்கும்போது அங்கு லேப்டாப் பையுடன் ஒருவர் தனியாக நிற்பதை கண்ட உதவி ஆய்வாளர் அவரிடம் விசாரிக்க அவர் மேற்படி பஸ்சில் திருடியதை ஒப்புக் கொண்டார். அவரது மோதி வயது (41), இவர் திருச்சி மாவட்டம் புங்கனூரை சேர்ந்தவர் ஆவார்.

மோதியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த லேப்டாப்பை பறிமுதல் செய்து யோகேஷ்வரனிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட மோதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Updated On: 13 Sep 2021 3:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  2. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  4. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  5. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  6. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  7. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  8. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  9. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  10. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...