/* */

பெரம்பலூரில் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலி

பெரம்பலூரில் அதிமுக ஒன்றிய செயலாளர் பொன் கலியபெருமாள் தனியார் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிசிச்சை பலன் இன்றி இறந்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலி
X

கருப்பு பூஞ்சை (பைல் படம்)

பெரம்பலூரைசேர்ந்த பொன்கலியபெருமாள் அதிமுக முன்னாள் ஒன்றியசெயலாளர் ஆவார்.கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே அருமடல் கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி என்பவர் கடந்த வாரம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருந்ததால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதே போல் குன்னத்தை சேர்ந்த லெனின் என்பவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வாறு பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது பொதுமக்களிடையே நோய்தொற்று குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 31 May 2021 6:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...