/* */

பெரம்பலூரில் மளிகை கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர் கைவரிசை

பெரம்பலூரில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் மளிகை கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர் கைவரிசை
X

பெரம்பலூர் மளிகை கடையில் மர்ம நபர் பூட்டை உடைக்கும் சிசிடிவி கேமிரா பதிவு

பெரம்பலூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் கணேஷ் வயது 35 . இவர் எளம்பலூர் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார் .

நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு தனது வீட்டிற்கு சென்றார். காலையில் கணேஷ் கடையின் ஷட்டர் கதவு திறந்து கிடப்பதை கண்ட அருகே இருந்தவர்கள் அவருக்கு தகவல் தெரிவித்தனர் .

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது கடையின் ஷட்டர் கதவின் பூட்டுகள் உடைக் கப்பட்டு திறந்து கிடந்தது தெரியவந்தது . மேலும் கடையின் உள்ளே சென்று பார்த்த போது கல்லாபெட்டி உடைக்கப்பட்டு , அதில் இருந்த ரூ 27ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது .

இதுசம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தினர் . மேலும் , மோப்பநாய், மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு ஆய்வு செய்து தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட் டனர் .

அங்கிருந்த சிசிடிவி கேமராவில் திருடும் காட்சிகள் பதிவாகி உள்ளது .இது சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர் யார் என்பது குறித்து தேடி வருகின்றனர் . மளிகை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருட்டு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது .

Updated On: 15 Nov 2021 6:56 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!