நாட்டு சாராயம் விற்பனை செய்தவர் கைது: பெரம்பலூர் போலீசார் அதிரடி

நாட்டு சாராயம் விற்பனை செய்தவர் கைது: பெரம்பலூர் போலீசார் அதிரடி
X
நாட்டு சாராயத்தை விற்பனை செய்தவரை, பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. மணி உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கிய பிரகாசம் தலைமையில், நாட்டு சாராயம் விற்போர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பில்லங்குளம் - காரியானூர் ரோட்டில் உள்ள தரைப்பாலம் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனை செய்ய எடுத்து கொண்டு வந்த மனோகரன் (54) , என்பரை பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் அவரது குழுவினர், கைது செய்தனர்.

அவர் விற்பனைக்காக பயன்படுத்திய 57 லிட்டர் அளவுள்ள நாட்டு சாராயத்தை கைப்பற்றியும், பின்னர் நாட்டு சாராயத்தை விற்பனை செய்ய பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, மேற்படி நபர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!