/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயுத பட்டறைகளில் போலீசார் திடீர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதம் தயாரிக்கும் பட்டறைகளில் போலீசார் திடீர் ஆய்வு நடத்தினர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயுத பட்டறைகளில் போலீசார் திடீர் ஆய்வு
X

பெரம்பலூர் அருகே உள்ள மங்களமேடு பகுதிகளில் அரிவாள்,கத்தி போன்ற ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறையை போலீசார் ஆய்வு செய்தனர்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி உத்தரவின்பேரில் மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சந்தியா ,தலைமையில் மங்களமேடு உட்கோட்டத்தில் உள்ள மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம்சீகூர் பகுதியில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் செய்யும் ஆயுத பட்டறையை ஆய்வு செய்யும் பணி நடந்தது.

மங்களமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தமிழ் செல்வி,ஆயுதங்கள் சரியான முறையில் தயாரிக்கப்படுகின்றதா? ஆயுதங்கள் வாங்கி செல்லும் நபர்களின் தகவல் சேகரிக்கப்படுகின்றதா, என்றும் குற்றவாளிகளாக கருதப்படும் நபர்களுக்கு ஆயுதங்கள் விற்கப்படுகின்றதா? என்றும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். சட்டப்படி குற்றவாளிகளுக்கு ஆயுதங்கள் விற்றாலோ, தயாரித்து கொடுத்தாலோ அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Updated On: 28 Sep 2021 12:06 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...