/* */

பெரம்பலூர் அருகே வீட்டு பூட்டை உடைத்து 35 சவரன் நகை திருட்டு

பெரம்பலூர் அருகே லெப்பைக்குடிகாட்டில், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 35 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்ட லெப்பைக்குடிக்காடு பகுதி, ஜமாலியா நகரில் வசித்து வரும் அப்துல்லா . இவர் நேற்று, வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் திருச்சிக்கு சென்றுள்ளார். இரவு 1O மணியளவில் வீடு திரும்பி வந்தனர்.

அப்போது, வீட்டின் பூட்டு மற்றும் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக மங்களமேடு காவல் நிலையத்தில், அப்துல்லா புகார் அளித்தார்.

தகவல் அறிந்த போலீசார், வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். கைரே கை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம், குன்னம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 27 April 2021 5:41 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  3. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  5. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  6. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  7. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  8. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  9. ஈரோடு
    அந்தியூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  10. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...