/* */

பெரம்பலூர் அருகே 4 குழந்தைகளின் தந்தை பாம்பு கடித்து உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே 4 குழந்தைகளின் தந்தை பாம்பு கடித்து உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே 4 குழந்தைகளின் தந்தை பாம்பு கடித்து உயிரிழப்பு
X

பாம்பு கடித்து இறந்த தமிழரசன்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் தெரணி கிராமத்தை சேர்ந்த தமிழரசன் (வயது 40) இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி (வயது30) என்ற மணைவியும்சுகன்யா(வயது16),செந்தமிழ்செல்வி(வயது15),ரம்யா(வயது-13) மணிசர்மா(வயது8) என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

இவர் இதே ஊரில் விவசாயம் செய்து வருகிறார். இவர் நேற்று காலை தன் வயலில் உள்ள கடலை செடிகளுக்கு நீர் பாய்ச்சி கொண்டு இருக்கும் போது விரியன் வகையை சேர்ந்த பாம்பு அவரை கடித்துள்ளது. இதனால் தலைசுற்றல் ஏற்பட்டு 1கிலோ மீட்டர் தூரம் நடந்து வீட்டுக்கு தகவல் தெரிவித்து விட்டு மயங்கியுள்ளார். வீட்டில் உள்ளவர்கள் அருகில் உள்ள காரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை அளிக்க முடியாமல் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உடல் முழுவதும் விஷம் பரவி அவர் மரணமடைந்தார். இந்த சம்பம் தெரணி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 15 April 2022 9:13 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...