/* */

சாலை விபத்து - 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

சாலை விபத்து - 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி
X

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வேப்பூர் அருகே கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேப்பூரில் இருந்து கொளப்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தினர் மீது கொளப்பாடியில் இருந்து வேப்பூர் நோக்கி வந்த கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேரில் சம்பவ இடத்திலேயே 2 பெண் குழந்தைகள் மற்றும் குழந்தையின் தாயும் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் குழந்தையின் 5 வயது சகோதரன் குழந்தையின் தந்தை மற்றும் பாட்டி ஆகிய 3 பேரும் கடுமையான காயங்களுடன் மயக்கமடைந்தனர்.

விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்தவர்கள், விபத்து குறித்து காவலர்களுக்கும் அவசர ஊர்தி 108கும் தகவல் கொடுத்ததை தொடர்ந்து விபத்தில் இறந்தவர்கள் மற்றும் கடுமையாக காயம் அடைந்தவர்களின் உடலை மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே பாட்டியும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் மாயமானதால் காரின் எண் மற்றும் விவரங்களை சேகரித்து வரும் குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விபத்து செய்தவரை தேடி வருவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 Feb 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்